29 Jan 2014

எனது சினிமா

உயிப்புடன் இருப்பதற்கும் உழைத்துக்கொண்டே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்குங்க.உழைப்பது பிழைப்பை ஓட்டவே என்றாலும் அதுவே 24 மணிநேரங்களை திண்ணும் போது உயிர்ப்புடன் இருப்பது என்பது பெருங்கனவு. கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கொரு குழப்பம் வந்தது. நம்ப பீல்டுல எல்லாரும் இந்த ஓட்டம் ஓடறாங்களே. யாராச்சும் யாரையாச்சும் ஏறி மிதிச்சு முந்திக்கிட்டே இருக்காங்களே.. நான் அந்த இயக்கத்துல தான் இருக்கனா? இல்ல தன்முனைப்பே இல்லாம இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து அரைவேக்காடாக பொங்கித் தின்று வாழ்க்கையை ஓட்டறனான்னு. சரி இந்த சினிமா ரேஸ்ல நாமும் ஒரு தடவை ஓடித்தான் பார்ப்போம். பிடித்தால் அது இயல்பு. இல்லைன்னா முயற்சி செய்யலைங்கற குற்ற உணர்வாவது இல்லாம இருக்குமேன்னு முடிவு செஞ்சு தலை தெறிக்க ஓடுனேன் பாருங்க அப்படிஒரு ஓட்டம். சுத்தி என்ன நடக்குதுன்னு தெளியறதுக்குள்ள 10 வருசம் முடிஞ்சுருச்சு! இப்ப கண்ணை முழிச்சு பார்த்தா பொருளா பதவியா சிலது கெடைச்சிருக்கு. ஆனா அதுல ஓடுனத்துக்கான அர்த்தம்னு சொல்லிக்கிட பர்சனலா ஒன்னுமே இல்லை. இருக்கும் திறமைக்கும் தண்டிக்கும் ஆன்மாவை கலந்தடிக்கற மாதிரி ஒன்னு செஞ்சுட்டோம்னு சொல்லிக்கற மாதிரி ஒரு ஹரி Action திரைக்கதையோ இளையராஜா கிடார் நோட்ஸோ அல்லது ஒரு வண்ணதாசனின் கண்களில் நீர்தேக்கும் ஒரு சின்ன நிகழ்வை கதையாக்கும் வித்தையோ  போல ஒரு உன்னதத்தின் உச்சியை அடைய முடியாட்டாலும் அதை உணரும் முயற்சியாகவாவது இருந்திருக்கலாம். செய்தது எதுவுமே எனக்காகவோ அல்லது எனக்குள்ளாகவோ இல்லைங்கறது ஏமாற்றத்தினை மட்டுமே தருகிறது. செய்யும் தொழிலே தெய்வம்கறதுல மாற்று கருத்தில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே உயிர்ப்பும் வேலையும் ஒரே இடத்தில் கிடைக்கிறது போல.


பிழைப்புவாதத்திற்காகவும் இன்னும் சொன்னால் கிடைக்கும் ஒரு எக்ஸ்ட்டா பூச்சியத்துக்காக மட்டுமே இன்னமும் இந்த துறையில் இருக்கிறேங்கறது தான் எனக்கு இப்போதைக்கு கிடைத்த தெளிவு. இதுல வருத்தப்படறதர்க்குஒன்னும் இல்லைன்னாலும் நமக்கே நமக்கான வாழ்வின் சில கணங்களை எதற்கோ எங்கனையோ சிதறவிட்டுட்டு இருக்கறது உண்மைதான் போல. சினிமாக்குள்ளான ஓட்டம் ஓடாமலேயே நமக்கான எல்லைகளையும் வாழ்க்கையும் வகுத்துக்கொள்ள முடியுங்கறதும் தெரியவந்த பொழுது வாழ்வில் எதற்கு முன்னுரிமை கொடுக்கனுங்கற லிஸ்டுல பயங்கர மாற்றம்! இழப்புகள் என்பது யாருக்காக என்பதைப் பொறுத்து அதன் மதிப்புகள் மாறித்தான் போகின்றன. மாறினால் தான் என்ன ஆகிவிடும்?


ஆகவே நான் ஓட ஓட ஓட ஓட்டம் என்னிக்கும் முடியாத ஓட்டப்போட்டியில் இருந்து நிதானிக்க போகிறேன்! ஆனால் எல்லா துறைகளையும் போலத்தான் எங்க பீல்டும்! கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு இருந்தம்னா கூட ஓடற வேகத்துல நாலுபேருக்கு இங்கிட்டு ஒரு பொணம்னு ஒரு மெயில் தட்டி அதை நானூறு பேருக்கு பரப்பி ஓரமா ஒதுக்கி ஓய்ச்சிருவாய்ங்க. அதனால இனிமேலுங்காட்டி என் வாழ்வுக்கான மற்றும் குடும்பத்துக்கான நேரங்களிலும் தலைதெறிக்க ஓடாம ஆனா ஓடறமாதிரியே காலை மட்டும் ஆட்டிக்கிட்டு பிடிச்சதை செஞ்சு உயிப்புடன் வாழப்போறேன். என்னது பிடிக்குமா? அதைத்தான் தேடப்போறேன்! எங்கன தேடுவனா?! என் தமிழ் சினிமாவில் .....MaggiMohan stunt


No comments:

Post a Comment