14 Mar 2016

சர்க்கரை நோய்க்கு சர்க்கரையே மருந்து

இநஎன்னங்க! தலைப்பை பார்த்தவுடனேயே அதிர்ச்சியா இருக்கா? இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இப்படி பைத்தியக்காரத்தனமாக எழுதுகிறாரே? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் எனது அனுபவத்தில் நானே ஒரு சர்க்கரை நோயாளியாக இருப்பதால் எனது அனுபவத்தை எழுதுகிறேன் அவ்வளவுதான்.

இந்த சர்க்கரை நோயை எந்த மருத்துவ முறைகளினாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. அது ஆங்கில மருத்துவமானாலும் சரி, ஆயுர்வேதா, சித்தா, யூனானி, ஹோமியோபதி மருத்துவ முறைகள் ஆனாலும் சரி. கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் அவ்வளவுதான். சர்க்கரை நோயை (நிரிழிவு) சர்க்கரை நோய் என்றும், உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் பரவயுள்ள ஒரு ஆட்கொல்லி நோய் என்றும் கூட சொல்லலாம். எய்ட்ஸ் நோயைவிட இந்த நோய் கொடியது.

1986 ஆம் ஆண்டு பால் லாங்கர் ஹான்ஸ் என்பவர்தான் முதலில் கணையத்தில் ஜலட்னின் என்னும் பகுதியைக் கண்டுபிடித்தார்.இக்கண்டுபிடிப்புதான் நீரிழிவு நோய் சரித்திரத்தில் ஒரு பெரிய மைல் கல்லாக கருத்தப்படுகிறது. இந்த ஜலெட்ஸ் அவரது கண்டுபிடிப்பு என்பதால் அவரது பெயரிலேயே ஜலெட்ஸ் ஆப் லாங்கர் ஹான்ஸ் என அழைக்கப்படுகிறது. 

சித்த மருத்துவம் என்பது ஒரு பெரும் கடல். அதையெல்லாம் நான் விவரிக்க விரும்பவில்லை. நீரிழிவிற்கும், கணையத்திற்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்தவர்கள், வான்பெரிங் மற்றும் மின்கோஷி என்பவர்கள். இவர்கள் நடத்திய ஆய்வில் கணையம் நீக்கப்பட்ட நாய்கள் தங்களால் உயிர்வாழ முடியாமல் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. நாம் உண்ணும் உணவு வழியாக உடலினுள் வரும் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாக கலந்து இருக்கும் நிலையைதான் நிரிழிவு (சர்க்கரை நோய்) என்று கூறுகிறோம். அடுத்து சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது நீரிழிவாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

நிரிழிவு நோய் ஏன், எப்பொழுது ஏற்படுகிறது என்று திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. உடல் நலக்குறைவு, அதிக எடை, பாரம்பரியக்குறைபாடு, உடற்பசியின்மை, கணையத்தின் சுரப்புக் கோளாறு போன்றவை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மனிதர்களின் இக்கால வாழ்க்கை முறைகள்தான சர்க்கரை நோய் வருவதற்கு காரணம். கணையம் செயல் அழந்து இன்சுலின் சுரக்காமல் இருந்தால் மன அழுத்தம், உடல் பெருத்தல், உடற்பயிற்சி இன்மை, உணவு பழக்க வழக்கங்கள், மதுபான பழக்கம், போதிய தூக்கம் இன்மை போன்ற காரணங்களால் கணையம் செயல் இழந்து இன்சுலின் சுரப்பின் அளவு குறைவு ஏற்படுகிறது. மற்றும் கண்பார்பை குன்றுதல், காலில் அரிப்பு, இருதய நோய் ஏற்பட்டு மாரடைப்பு வருகிறது. கிட்னியும் பாதிப்படைகிறது.

உடலில் இரைப்பைக்கு கீழே பின்புறத்தில் இலைவடிவத்தில் உள்ள பான்கிரியாஸ் என்பதற்குதான் கணையம் என்று பெயர். இதில் நூற்றுக்கணக்கான பிட்டா செல்கள் உள்ளன. இந்த செல்கள்தான் இன்சுலினைச் சுரக்கிறது. நாம் அதிக இனிப்புள்ள உணவுகளை உண்ணும்போது அதில் சர்க்கரையின் உளவு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்த உடலில் உள்ள இன்சுலின் சுரக்கிறது. தேவையான சர்க்கரை அளவை வைத்துக் கொண்டு மீதியை சக்தியாக மாற்றித் தருகிறது. இது நடக்கவில்லையென்றால் சர்க்கரையின் அளவு மிகுதிப்பட்டு வருகிறது.

மேலே நான் எழுதிய செய்திகள் எல்லாம் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மைகள், யாராலும் மறுக்க முடியாது. ஆனால் என் வாழ்க்கையில் நடைபெற்றுவரும் உண்மைகளைக் கூறுகிறேன். எனக்கு இப்போது 83 வயது நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டது. எனது புதல்வர் என்னை அழைத்துக் கொண்டு பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உடல் முழுவதும் பரிசோதனைகள் செய்து ஸ்கேன், எக்ஸ்ரே, சிறுநீர், இரத்தப் பரிசோதனைகள் என்று பல பரிசோதனைகள் செய்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு.

கடைசியாக இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரை அதிகமாக உள்ளது என்று கூறினார்கள். இரத்தத்தின் சர்க்கரை அளவு 380, சிறுநீரில் சர்க்கரையின் அளவு +++ என்ற ரிசல்ட்டைக் கொடுத்தார்கள். டயாமைக்ரான் அம்.ஆர். என்ற மாத்திரை கொடுத்தார்கள். அனுதினமும் காலையில் சாப்ப்பிட்ட பிறகு 1 மாத்திரை சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள். அத்துடன் ஆகாரக் கட்டுப்பாடு முறை சீட்டை ஒன்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் என்னை அனுப்பி வைத்தார்கள். -

கடந்த 5 ஆண்டுகள் விடாமல் டயாமைக்ரான் மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். சர்க்கரையின் அளவு நார்மலாகத்தான் இருக்கிறது. ஆனால் உடல் அசதி, பலவீனம் அதிகமாக இருந்தது. உற்சாகம் இல்லை. இந்த சூழ்நிலையில் ஒரு சில வருடங்கள் இனிப்புச் சேர்க்காமல் ஆகாரக்கட்டுப்பாடுகளுடன் இருந்து வந்தேன். எனது உடல் பலவீனம் குறையவில்லை. ஆனால் சர்க்கரையின் அளவு நார்மலாகவே இருந்து வந்தத்து.

என்னிடம் இருந்த சித்த மருத்துவ ஏட்டுச் சுவடிகளில் புரட்டிப் பார்த்தேன். நீரிழிவு நோய்க்கு ஆலம் விழுது சிறந்த மருந்து என்னும் குறிப்பு இருந்தது. மறு நாளிலிருந்தே ஆலம் விழுதை ஒரு கைபிடி அளவு பிடுங்கி மிக்ஸியில் போட்டு சிறிது மோர்விட்டு கடைந்து அதில் வரும் சாற்றை எடுத்து அனுதினமும் அதிகாலையில் 5 மணிக்கு ஆகாரத்திற்கு முன்பு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டேன்.

அடுத்து இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டு கொம்பன் பாவற்காய் (நீளமாக இருக்கும்) அதில் ஒரு காயை எடுத்து இரண்டாகப் பிளந்து உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலந்து ஆகாரத்திற்கு முன்பு காலையில் மட்டும் 1வேளை சாப்பிட்டேன். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு முடித்தேன். அடுத்து முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும். விஷத்தை விஷத்தால்தான் முறிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த மூலப்பொருளிலிருந்து ஒரு நோய் உண்டாகிறதோ அந்த மூலப் பொருளைக் கொண்டே அந்த நோயைக் குணப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை என் மனதில் உருவானது. எனவே மறு நாளிலிருந்து காபி, டீ-யில் இனிப்புகள் கலந்து சாப்பிட ஆரம்பித்தேன். இடியாப்பம், ஆப்பம், உப்புமா, தோசை எல்லாவற்றிலுமே சீனியுடன் பாலும் கலந்து சாப்பிட ஆரம்பித்தேன். அனுதினமும் லட்டு, ஜிலேபி, கேக் என்று மாலையில் டிபன் சாப்பிடும் சமயம் சாப்பிட்டு வருகிறேன்.

எனக்கு உடம்பில் தெம்பு ஏற்பட்டு உற்சாகமாக செயல்படுகிறேன். எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. ஆனால் எந்தக் காரணம் கொண்டும் டயாமைக்ரான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சர்க்கரையின் அளவு நார்மலாகவே இருந்து வருகிறது. இதிலிருந்து நான் கண்ட உண்மை, 'சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன்'. இது என்னுடைய உடல்நிலைக்கு பொருந்துகிறது'. எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை போல் மற்றவர்களுக்கும் மாற்றம் ஏற்படுமா? என்பதை உறுதி சொல்ல முடியாது. மற்றவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

மருத்துவ மேதைகளுக்கு ஒரு விண்ணப்பம். எனது கருத்துகளில் தவறு இருந்தால் எனக்கு விளக்கம் அளியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். எனது நண்பர்கள் பலருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு அனுதினமும் இன்சுலின் ஊசிகளும் போட்டு மாத்திரைகளும் சாப்பிட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். எனது நண்பர்களில் இரண்டு பேருக்கு கால்விரல் துண்டிக்கப்பட்டு புண் ஆறாமல் சிகிச்சை செய்து கொண்டு வருகிறார்கள்.

எனக்கு மட்டும் ஏன் குணமாகி வருகிறது என்பதை என்னால் ஆராய்ந்து பார்க்க முடியவில்லை. எனக்கு தற்போது 83 வயதாகிறது. இன்னும் கண்ணுக்கு கண்ணாடி அணியவில்லை. தலைமுடி நறைக்கவில்லை. ஊசியில் நூலை சர்வசாதாரணமாக கோர்த்து விடுகிறேன். என்னைப் பார்த்து எல்லோரும் 'என்னை ஒரு விந்தை மனிதன்' என்றே போற்றி வருகிறார்கள்.

என்னுடைய பழக்கவழக்கங்கள்:

1984ஆம் ஆண்டிலிருந்து வெள்ளிக்கிழமைதோறும் உபவாசம் இருந்து வருகிறேன். அனுதினமும் காலையும், இரவும் தவறாது பைபிள் வாசித்து ஜெபித்து வருகிறேன். பீடி, சிகரெட், மது, போதைபொருட்கள் எதுவும் உபயோகிக்க மாட்டேன். டிவி. சினிமா பார்ப்பது இல்லை. பைபிளில் உள்ள சிறிய எழுத்துக்களையும் இரவில் சர்வ சாதாரணமாக வாசிப்பேன். 

என்னைப் பார்க்கிறவர்கள் நான் 83 வயது என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். உங்களுக்கு 60 அல்லது 65 தான் இருக்கும் நீங்கள் தவறாகச் சொல்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் என்ன சொல்வது. என்னுடைய பழக்கவழக்கங்களினால் எனக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்குமோ என சிந்திக்கிறேன். எப்படியோ, நான் நல்ல சுகத்துடன் வாழ்ந்து வருகிறேன். சர்க்கரை இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. என்னைப் போலவே அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையும் கூட.

குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு குறையும்போது தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படுகிறது. டாக்டர்களிடம் கேட்டால் சீனி, அல்லது சாக்லேட்டை வாயில் போட்டு சுவைத்து சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். அப்படிச் சாப்பிடும்போது தலைச்சுற்றல் மயக்கம் உடனே மாறி விடுகிறது ஏன் என்பதை சிந்தியுங்கள். எனவே சர்க்கரை மனித வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது என்ற உண்மை புலப்படுகிறது.

தொடர்புக்கு...

தலைமை நிலையம்:

சித்த மருத்துவ மேதை லயன் டாக்டர் A. தேவராஜன் R.M.P. (IND) C.B.I.M.,
மனோன்மணி மருத்துவமனை,
7-3/125, பெருமாள் கோவில் தெரு, 
பேரையூர் P.O.(T.K.), மதுரை - 625 703. 

தொலைபேசி:  04549 - 275695, செல்: 94437 75695
இமெயில்: maduraidevarajan@gmail.com

மதுரை:

ஹோமியோ ஹோம் / பிரிதா ஹோமியோ கிளினிக்,
S-7, கிங்ஸ் கோர்ட், அன்னபூர்ணா லாட்ஜ் அருகில், 
ஜோதி ஆப்டிக்கல்ஸ் மாடியில், 
அண்ணா பஸ் ஸ்டாண்ட்,  மதுரை - 20. 

தொலைபேசி:  0452 - 4393722, செல்: 94430 25213

(வேலை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை)

No comments:

Post a Comment