Posted Date : 15:16 (06/07/2016)
சாம்சங் நிறுவனம் முதன் முதலாக ஒரே நாளில் 44 வகையான புதிய டிவிக்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு) ராஜீவ் பூட்டானி கூறுகையில், "மிக துல்லியமான காட்சியமைப்பைக் கொண்ட 'எஸ்யுஎச்டி' டிவி வரிசையில் 49 அங்குலம் முதல் 88 அங்குலம் வரையிலான 9 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.1.79 லட்சம் முதல் ரூ.23.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜாய் பீட் வரிசையில் 32 அங்குலம் முதல் 88 அங்குலம் வரையிலான திரைகளைக் கொண்ட 7 டிவிக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை, ரூ.27,500 முதல் ரூ.69,500 வரையிலானதாகும்.
எஞ்சியுள்ள மாடல்கள் அனைத்தும் ஸ்மார்ட் டிவி வகையைச் சேர்ந்தவை. 32 முதல் 88 அங்குலம் வரையிலான திரைகளைக் கொண்ட இவ்வகை டிவிக்களின் விலை ரூ.34,500 முதல் ரூ.7.04 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
கடந்த 2015 ம் ஆண்டில் 4.82 கோடி டிவிக்களை விற்பனை செய்து 31 சதவிகித பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் சந்தையில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில், சந்தைப் பங்களிப்பை 35 சதவிகிதமாக அதிகரிக்க சாம்சங் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
No comments:
Post a Comment