குறும்படம் எடுப்பவர்களுக்கு இப்போதைய ப்ரச்சனையே தற்கால சினிமாதான். பெரும்பாலான குறும்படங்கள் கமர்ஷியல் சினிமாவை ஒட்டியே இருக்கிறது. அதை மீறி நான்கைந்து குறும்படம் செய்த இயக்குனர்கள் திரைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் போது பத்து நிமிட குறும்படத்தையே மீண்டும் ரெண்டு மணி நேர படமாக்க நினைக்கிறார்கள். அங்கே தான் சறுக்குகிறார்கள். பத்து நிமிட குறும்படத்தில் கடைசியில் வரும் ட்விஸ்ட் சுவாரஸ்யத்தை கொடுக்கும் ஆனால் அந்த ஒரு டிவிஸ்ட் மட்டுமே நம்பி திரைப்படமாக்கும் போது நம்பினால் கை கொடுக்காது. எனவே குறும்பட இயக்குனர்கள் திரைப்பட வாய்ப்பு வரும் போது நல்ல கதைகளை தெரிந்தெடுத்து பண்ணினால் இன்னும் நல்ல தரமான படங்கள் வர வாய்ப்பு அதிகமென்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment